நிலக்கரி படுக்கை மீத்தேன் (அ) கோல் பெட் மீத்தேன் என்றால் என்ன?

பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி படுகைகளில் விரவிக்கிடக்கும் மீத்தேன் வாயு அழுத்தம் காரணமாக அங்கே பொதிந்துள்ள நிலக்கரி கற்களின் புறப்பரப்பில் மெல்லிய தாள் போன்று படிந்து கிடக்கின்றன. நிலக்கரி படுகைக்குள் இருக்கும் புவிஅழுத்தத்திற்கு  முக்கிய காரணமாக இருப்பது அந்த சூழ்நிலையில் உள்ள நிலத்தடி நீராகும்.

நிலக்கரி படுகையில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியே எடுக்கும் போது மீத்தேன் வாயுவும் நீரோடு சேர்ந்து வெளிவரும். வெளியே எடுக்கப்பட்ட நீர் உரிய உபகரணங்களுக்குள்  செலுத்தப்பட்டு  நீரும் மீத்தேன் வாயுவும் தனித்தனியே பிரித்து எடுக்கப்படும். 

இந்த திட்டத்தில் லட்சக் கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் ராட்சத முறையில் உறிஞ்சி எடுக்கப்படும். வெளியேற்றி மீத்தேன் பிரிக்கப்பட்ட வாயு நச்சுத்தன்மையுள்ள ரசாயன மூலக்கூறுகளை கொண்டிருக்கும், அதை நீர் என்பதை விட "நச்சுக்கழிவு" என்றே கூறவேண்டும்.  

விளக்கப் படம்



ஆழ்துளைக் கிணறுகள் வெட்டி, முதலில் 500 முதல் 1650 அடி ஆழம் வரை உள்ள நன்னீரை அசுர நீர் இறைப்பிகளால் இறைத்து வெளியே விடுவார்கள். அப்படி இறைக்கும் போது, நன்னீருடன் உப்பு, அமிலமும், கரியும் கலந்து கெட்ட நீராக மாறிவிடும்.

அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும், குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள் போன்ற ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள்.

நிலத்தடியில் இருந்த நன்னீர், கெடு நீராக மாறியதொடு, வாய்க்கால், ஆறுகள், ஓடைகளில் ஓடும் நன்னீரையும் கெடு நீராக மாற்றி விடும்.

இப்படி நீரை இறைத்து வெளியேற்றியவுடன், அசுர உறிஞ்சிகளால் நிலக்கரிப் பாறைகளில் இருக்கும் நுண் துளைகள் வழியே வரும் மீத்தேனை உறிஞ்சி எடுப்பார்கள்.

இப்படி எடுக்கப் பட்ட மீத்தேனை பெருங்குழாய்கள் வழியே பிற மாநிலங்களுக்கும், சிங்களத்துக்கும், சிறிது தமிழ்நாட்டுக்கும் அனுப்புவார்கள். அந்தப் பெருங்குழாய்த் திட்டத்துக்கும் கூடுதல் நிலம் தேவைப்படும்.

No comments:

Post a Comment