காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் முறை

நிலக்கரி படுகை மீத்தேன் வாயு ஒரு குறிப்பிட்ட பகுதியில் செறிவாக குவிந்திருப்பது அல்ல. நிலக்கரிப் படிமத்தில் –அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப்பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டியிருப்பது .மன்னார்குடிப்பகுதி நிலக்கரிப் படிமங்கள் தரைமட்டத்திற்கு கீழே 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகின்றது. தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்த படிமங்களை அழுத்திக்கொண்டுள்ளது. 

இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீத்தேன் வாயு நிலக்கரிப்பாறைகளில் இருந்து வெளியேற முடிவதில்லை. நிலக்கரிப்பாறை மீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றியதன் பின்னரே மீத்தேன் வாயு வெளிவரமுடியும். அடுத்தகட்டமாக வெற்றிடமுண்டாக்கும் கருவிகளைக்கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்றவேண்டும். 

அவ்வாறு நிலத்தடி நீர் 500 அடி முதல் 1650 அடிவரை வெளியெற்றப்படும்போது காவிரிப்படுகையின் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிகளுக்கு கீழே இறங்கிவிடுவதோடு இந்த மன்னார்குடி நிலக்கரி படுகையிலிருந்து சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு தொடர்புள்ள நிலத்தடிநீர் தொகுப்புகள் அனைத்தும் வறண்டு போகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக மிக அருகாமையில் உள்ள வங்கக்கடலின் உப்பு நீர் காவிரிப்படுகையின் உள்ளே ஊடுருவும்.காவிரிப்படுகை ஒரு உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும். நிலநடுக்கங்கள், மண் உள்வாங்குதல் போன்றன நிகழும் அபாயமும் உண்டு.

No comments:

Post a Comment